சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு



கோவை மாவட்டம், நீலிக்கோணாம்பாளையத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜெயநாயகி (67). புதனன்று இரவு 9 மணியளவில் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஜெயநாயகி கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயநாயகி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் திரண்டனர். அதற்குள், அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார். இதுகுறித்து, ஜெயநாயகி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

அதேப்போல், கடந்த திங்கள்கிழமை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். மேலும், கோவையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சாலையில் நடந்து சென்ற 8 பேரிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...