நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை தண்டனை வழங்கி பழனி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மருதசாமி (65). இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனி துணை வட்டாட்சியராக இருந்த பாஸ்கரன் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அப்போது பாஸ்கரன் சொந்த வீடு கட்டி வருவதாகவும், பணம் பற்றாக்குறையாக இருப்பதால் ரூ. 3 லட்சம் கடனாக தரும் படியும் மருதசாமியிடம் தெரிவித்து கடன் வாங்கியுள்ளார். கடன் தொகைக்கு வங்கிக் காசோலையை ஈடாக தந்துள்ளார். பின் வீடு கட்டி வீட்டை காலி செய்த பின்பும் கடனை திருப்பித் தரவில்லை. இதையடுத்து, காசோலையை வங்கியில் வழங்கிய போது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.
இதனால் மருதசாமி, பழனி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன், பாஸ்கரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். பாஸ்கரன் தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உதவி ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மருதசாமி, பழனி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன், பாஸ்கரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். பாஸ்கரன் தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உதவி ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.