நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை- பழனி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை தண்டனை வழங்கி பழனி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மருதசாமி (65). இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனி துணை வட்டாட்சியராக இருந்த பாஸ்கரன் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அப்போது பாஸ்கரன் சொந்த வீடு கட்டி வருவதாகவும், பணம் பற்றாக்குறையாக இருப்பதால் ரூ. 3 லட்சம் கடனாக தரும் படியும் மருதசாமியிடம் தெரிவித்து கடன் வாங்கியுள்ளார். கடன் தொகைக்கு வங்கிக் காசோலையை ஈடாக தந்துள்ளார். பின் வீடு கட்டி வீட்டை காலி செய்த பின்பும் கடனை திருப்பித் தரவில்லை. இதையடுத்து, காசோலையை வங்கியில் வழங்கிய போது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.

இதனால் மருதசாமி, பழனி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன், பாஸ்கரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். பாஸ்கரன் தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உதவி ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...