சென்னை: பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ஒரேநாளில் ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கியில் 4 சிறப்பு கவுன்ட்டர்களுடன் மொத்தம் 8 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5,400 கோடி வந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் ரூ.480 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் இன்று முதல் ஒருவர், அதிகபட்சமாக ரூ.2,000 வரை பணம் எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கியில் 4 சிறப்பு கவுன்ட்டர்களுடன் மொத்தம் 8 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5,400 கோடி வந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் ரூ.480 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் இன்று முதல் ஒருவர், அதிகபட்சமாக ரூ.2,000 வரை பணம் எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.