சாகிபாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் சாகிபாபாத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் சாகிபாபாத் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திடீர் தீ விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் சாகிபாபாத் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திடீர் தீ விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.