சிறந்த தரத்திற்காக டெமிங் விருதுபெற்ற அசோக் லைலான்ட் வாகன உற்பத்தி நிறுவனம்


பந்த்னாகரில்  செயல்படும் அசோக் லைலான்டின் கனரக வாகன உற்பத்தி ஆலைக்கு 2016ம் ஆண்டுக்கான தரத்தினை போற்றும் வகையில் டெமிங் விருது வழங்கப்பட்டது.



ஜப்பான் நாடு அல்லாமல் டெமிங் விருதினைப் பெரும் வேற்று நாட்டு நிறுவனம் இதுவே முதன்முறையாகும். இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லைலேன்ட் நிறுவனத்தின் பந்த்நகர் வாகன உற்பத்தி ஆலைக்கு 2016ம் ஆண்டுக்கான சிறந்த தரத்தின் அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது டிக்யூஎம் தரக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். கனரக வாகன உற்பத்தியில் இவ்விருது வழங்குவதும் உலக அளவில் இது முதல்முறை என கூறப்படுகிறது.

இவ்விருதை அசோக் லைலேன்ட் நிறுவனத்தின் விநோத் கே தாசரி ஜப்பான் நாட்டில் நடைபெற்ற விழாவில் 

பெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''அசோக் லைலேன்டைச் சார்ந்த நாங்கள் இவ்விருதினைப் பெருவது பெருமைவாய்ந்த தருணமாகும். ஜப்பான் வெளியே கனக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இந்த விருது பெரும் நிறுவனமாக அசோக் லைலேன்ட் இருப்பது எங்களது நிறுவனத்திற்கு மகுடம் சூடுவது போல் உள்ளது. எங்கள் பந்த்நகர் உற்பத்தி ஆலை நவீன தொழில்நுட்பத்துடனும், விதிமுறைகளையும் கொண்டுள்ள முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலை  ஆகும். எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்'' என்றார்.

அசோக் லைலேன்டின் மூத்த அதிகாரி ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-

நாங்கள் எங்கள் நிறுவனத்தில் தரத்திற்கும், வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் தேவைகளைப் பொருத்து வாகனங்களை உற்பத்தி செய்கிறோம். திறமையான ஊழியர்களின் செயல்பாடு, தொழில்நுட்பம்   போன்றவையே  எங்களது தரத்தின் அடிப்படை ஆகும். சிறந்த ஒருங்கிணைப்பே எங்கள் தரத்தினை மேம்படுத்துகிறது'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...