இன்றே இந்த ஆஃபர் கடைசி.. பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை கொடுத்து இன்று மட்டும் மின்சார பில் கட்டலாம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்சார கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளாட்சித்துறைகள் உட்பட அரசு அலுவலகங்களில் கட்ட வேண்டிய வரி மற்றும் அபராத கட்டணத்தை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்துவோர் இன்று மட்டும் (அதாவது, நவம்பர் 11ம் தேதி) இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நவம்பர் 9ம் தேதி மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி நாளாக இருந்தவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த கால நீட்டிப்பு தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...