கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இங்கு உள்ள தாய் சேய் நல மையம் அருகே பாதாள சாக்கடை திறந்த நிலையில் உள்ளது. இதனால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் துர் நாற்றம் வீசி வருவதால் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திறந்து கிடக்கும் இந்த பாதாள சாக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை வந்து செல்லும் பொது மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் துர் நாற்றம் வீசி வருவதால் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திறந்து கிடக்கும் இந்த பாதாள சாக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை வந்து செல்லும் பொது மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
