பாலைவனம் சூழ்ந்த துபாயில் கற்பனைக்கு எட்டாத வகையில் பிரம்மாண்ட கால்வாய் திறப்பு

பாலைவனம் சூழ்ந்த துபாய் நகரம் கற்பனைக்கு எட்டாத வகையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பெற்றதோடு தற்போது புதிய அடையாளமாக பிரம்மாண்ட கால்வாயும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. துபாயில் 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு திர்ஹம்ஸ் 270 கோடி செலவில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் பிஸினஸ் பே பகுதியில் அமைந்துள்ள கால்வாயுடன் ஜுமைரா பகுதியை இணைக்கும் வகையில் புதிய நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முழுவதும் நிறைவுபெற்றது. இந்த கால்வாய் பகுதி துபாய் கடல் பகுதியில் தொடங்கி  ஜுமைரா சாலை, அல்வாசல் சாலை சபா பூங்கா ஆகிய பகுதிகளை கடந்து பிசினஸ் பே பகுதியை அடையும்.

இதன் தொடக்க விழா துபாயில் நடைபெற்றது.புதிய கால்வாயை துபாய் ஆட்சியாளரும், அமீரக பிரதமருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் திறந்து வைத்தார்.துவக்க நாளன்று கால்வாய் பகுதி லேசர் ஒளிகதிர் மூலம் வண்ணமயமாக மின்னியது தற்போது அமைக்கப்பட்டுள்ள 3.2 கிலோ மீட்டர் கால்வாய் மூலம் ஏற்கெனவே பிஸினஸ் பே பகுதியில் உள்ள கால்வாயையும் சேர்ந்து பெரிய அளவில் கால்வாய் விரிவடைந்து உள்ளது. இதன் மூலம் துபாயில் நீர் வழி போக்குவரத்து அதிகரிக்கும். கால்வாயில் 5 இடங்களில் படகு நிறுத்தும் இடங்கள் உள்ளது. 5 நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கால்வாய் துபாய் நகருக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...