ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாகக் கூறி பெண்ணிடம் நூதன மோசடி- வாலிபர் கைது


கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி ஜோதி (42) கடந்த மாதம் 22ம் தேதியன்று கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராதநிலையில், அருகில் இருந்த இளைஞர் உதவுவதாகக் கூறி ஜோதியின் ஏடிஎம் அட்டையினை பயன்படுத்தி ஒரு தொகையினை எடுத்து கொடுத்துள்ளார். பின், ஜோதியின் ஏடிஎம் அட்டைக்கு பதிலாக தான் கொண்டுவந்திருந்த போலி ஏடிஎம் அட்டையினை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜோதியின் கைபேசிக்கு ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் போலி அட்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த ஏடிஎம் அட்டை கடைசியாக பயன்படுத்தப்பட்ட பகுதியினைக் கொண்டு இந்த நூதனமோசடியில் ஈடுபட்டவரை பிடித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவரது பெயர் செந்தில்குமார் (32) என்பதும், ஆனைமலை அடுத்த தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...