உத்தரபிரதேசத்தில் ஒரு கிலோ உப்பின் விலை ரூ 200 முதல் 400 வரை

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் அம்மாநிலத்தில் ஒரு கிலோ உப்பு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.சில இடங்களில் ரூ 400 வரை விற்கபடுகிறது

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,இன்றே வாங்கி இருப்பு வைக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது எனவும் தகவல்கள் பரவின.

இதனால் பயந்து போன மக்கள் உப்பு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். உப்பு தட்டுப்பாடு குறித்த பயத்தினால் மக்கள் அதிகளவு உப்பை வாங்கிக் குவிப்பதை அறிந்த சில வியாபாரிகள், ஒரு கிலோ உப்பை 200 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளனர்.

வடக்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் லக்னோ, அலகாபாத், மொராதாபாத் ஆகிய இடங்களில் இந்த அநியாய விலைக்கு உப்பு விற்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் வெறும் வதந்தி எனவும், இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. ”உத்தரபிரதேசத்தில் உப்புக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை.உப்பை அதன் உண்மையான விலையைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்கக் கூடாது. இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.” என உத்தரபிரதேச காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவிய இந்த தகவலையடுத்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரான ஹெம் பாண்டே,”நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது வெறும் வதந்தி. மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

”சில பேர் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதாக புரளியை கிளப்புகின்றனர். இது முற்றிலும் தவறான தகவல்.” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் உப்பு வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அந்தந்த பகுதி காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...