கோவையில் வந்தடைந்த டெல்லி இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்.

இந்திய விமானப் படை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய விமானப் படை சார்பாக டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப் படை பற்றிய கண்காட்சி வாகனம் கோவைக்கு வந்தது. அதன் ஒருபகுதியாக இன்று ஜி.டி மெட்ரிக் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்துரையாடினர்.
 



இது குறித்து, டெல்லி இந்திய விமானப் படை இணை இயக்குநர் பணியாளர்கள் அதிகாரி ஜோசப் கூறுகையில்:- 
இந்திய விமானப்படை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை சார்பில் ஒரு கண்காட்சி வாகனம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.  இந்த வாகனம் ஜெய்ப்பூர், குஜராத், புனே, பெங்களூர் போன்ற இடங்களில் சென்றும்  தற்போது கோயமுத்தூர் வந்தடைந்துள்ளது.



ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளோம். கோவையில் அமிர்த பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்லூரி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் விமானப்படை சம்மந்தமான வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களும், விமானப்படையினர் உபயோகப்படுத்தும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் விமானப்படையில் மாணவர்கள் சேர்வதற்கு இக்கண்காட்சி ஊக்கம் அளிக்கும் என அவர் கூறினார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...