கோவை: இராமநாதபுரம் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருது வழங்கும் விழாவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு, சிறப்பு விருந்தினராக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்புசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி அனைவரையும் பாராட்டினார்.

கோவை மாவட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஒருங்கினைப்பான அகாடமி கவுன்சிலால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளையும், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கெரவிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, கோவை மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன், அகாடமி கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜோசப், பொருளாளர் ஆண்டனி, செயலாளர் ஹாஜா செரீப், அல்வேர்னியா பள்ளி முதல்வர் செலீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கோவை மாவட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஒருங்கினைப்பான அகாடமி கவுன்சிலால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளையும், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கெரவிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, கோவை மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன், அகாடமி கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜோசப், பொருளாளர் ஆண்டனி, செயலாளர் ஹாஜா செரீப், அல்வேர்னியா பள்ளி முதல்வர் செலீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
