தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், சிறந்த பள்ளிக்கும் விருது வழங்கும் விழா

கோவை: இராமநாதபுரம் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருது வழங்கும் விழாவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு, சிறப்பு விருந்தினராக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்புசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி அனைவரையும் பாராட்டினார்.



கோவை மாவட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஒருங்கினைப்பான அகாடமி கவுன்சிலால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகளையும், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கெரவிக்கப்படுகிறது. 



இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, கோவை மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன், அகாடமி கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜோசப், பொருளாளர் ஆண்டனி, செயலாளர் ஹாஜா செரீப், அல்வேர்னியா பள்ளி முதல்வர் செலீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...