ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சார்லி. இவரது மனைவி பாத்திமா மேரி (66) சம்பவத்தன்று. இவர் காந்திபுரம் 3வது வீதியில் நடந்து சென்றார். அப்போது போலீசார் போல வேடமணிந்து வந்த மர்ம நபர்கள் பாத்திமா மேரியிடம் பேசினர். மேலும், இப்பகுதியில் தங்க சங்கிலிகள் அதிகமாக கொள்ளை போவதாக, அந்த பெண்ணை எச்சரித்ததோடு, அவரிடமிருந்த 4 பவுன் சங்கிலையை கழற்றுமாறு கூறினர். பாத்திமா மேரி கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.
இது குறித்து ரத்தினபுரி போலீசாரிடம் பாத்திமா மேரி புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகர பகுதியில் அதிகரித்து வரும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இது குறித்து ரத்தினபுரி போலீசாரிடம் பாத்திமா மேரி புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகர பகுதியில் அதிகரித்து வரும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.