நாசிக் அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுகள்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அச்சகத்தில் 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.500, 1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ., 8 ம் தேதி அறிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்.,களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்களின் இந்த சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‛மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் நோட்டுக்கள் நவ., 16ம் தேதி விநியோகத்திற்கு அனுப்பப்பட உள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒன்பது அச்சகங்களில் நாசிக் அச்சகமும் ஒன்று. இங்கு ரூ.20, 50, 100 நோட்டுக்களும் அதிக அளவில் அச்சிடப்பட்டு வருகிறது. அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ரூ.2,000 நோட்டுக்கள் மட்டுமே இதுவரை புழக்கத்திற்கு வந்துள்ளன. புதிய ரூ.500 நோட்டுக்களும் தங்குதடையின்றி கிடைப்பதற்காக அதிக அளவில் அச்சிடப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...