கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு கோயமுத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு நடைபெற்ற எழுத்துப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி விளையாட்டுப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகாத்திகேயன் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

மேலும் சிறந்த மாநகராட்சி பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
