பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 24ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் அரசு அறிவிப்பு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி மத்திய அரசு திடீரென அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய  ரூ.500, ரூ.2000 நோட்டுகள் இதன் மூலம் மக்களிடம்  கொஞ்சம், கொஞ்சமாக   புழக்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.

பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்தது போக, ஏ.டி.எம்.கள் மூலமாகவும் மக்கள் பணம் பெற்று வருகிறார்கள். இன்று பொதுமக்கள் 5-வது நாளாக வங்கிகளை முற்றுகையிட்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள்.

இதற்கிடையே வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் பெறும் பணத்தின் உச்சவரம்பு  அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி வங்கிகளில் இன்று முதல் ரூ.4000க்கு பதில் ரூ.4500 வரை பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகள் மாற்றிக் கொள்ளலாம். அதுபோல ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம்.கள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய ரூ.500 நோட்டுகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்ததும் இந்த நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இன்னும் சில தினங்களில் நிலைமை சரியாகத் தொடங்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இதுபற்றி மத்திய அரசின்  உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அனைத்து சேவைகளுக்கும் பழைய ரூ.500,  ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க இயலாது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று  அறிவிக்கப்பட்ட போது, பெட்ரோல் பங்க், சுங்க சாவடி, ஆஸ்பத்திரி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நோட்டுகளை 11-ந்தேதி வரை மக்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த 3 நாள் அவகாசம் போதாது என்று தெரிய வந்ததால் 14-ந்தேதி வரை அதாவது இன்று வரை மேலும் 3 தினங்களுக்கு அத் தியாவசியத் தேவைகளுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று இரவுடன் அந்த  காலக்கெடு  முடிய இருந்தது.

இதனால் நாளை முதல் பெட்ரோல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், சுங்க சாவடி களில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த முடியாதே என்ற அச்சம் நாடெங்கும் ஏற்பட்டு இருந்தது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் பழைய ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் 24-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு இன்று காலை அறிவித்தது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெட்ரோல் நிலையங்கள், ஆஸ்பத்திரி களில் இன்னும் 10 நாட் களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாமானிய மக்கள் அடுத்த 10 நாட்களுக்கு பிரச்சினையின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...