கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கோவை தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பணம் வழங்காததால் கூட்டுறவு வங்கிகள் மேல் விவசாயிகளுக்கு உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் இயங்கப்பட்டு வருகிறது, கோவை மாவட்டத்தை பொருத்தவரை 276 கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகளே அதிக பயனாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாநில அரசின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மத்திய வங்கியில் செலுத்திய பணத்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்திய விவசாயிகள் பணத்தை எடுக்க முடியாமலும், விவசாய நகை கடன், உள்ளிட்ட கடன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு பெரிய தொகை வழங்க முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக கூட்டுறவு வங்கி செலுத்திய பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் இயங்கப்பட்டு வருகிறது, கோவை மாவட்டத்தை பொருத்தவரை 276 கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகளே அதிக பயனாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாநில அரசின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மத்திய வங்கியில் செலுத்திய பணத்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்திய விவசாயிகள் பணத்தை எடுக்க முடியாமலும், விவசாய நகை கடன், உள்ளிட்ட கடன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு பெரிய தொகை வழங்க முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக கூட்டுறவு வங்கி செலுத்திய பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.