பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அமிர்த் சிறப்பு மையத்தில் உள்ள குழந்தைகளோடு இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடினர்.

பேப்டிஸ்ட் அகாடமி பள்ளியின் முதல்வர் டேனியல் கூறுகையில்:-
குழந்தைகள் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த வருடம் குழந்தைகள் தின விழாவினை அமிர்த் சிறப்பு மையத்தில் இவர்களுடன் கொண்டாடுகின்றனர். இவர்களை புரிந்து கொண்டு இவர்களுக்கு உதவி செய்வது மூலம் மாணவர்கள் பல்வேறு நல்ல செயல்களை கற்றுக்கொள்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு கற்பிக்கப்டும் பல்வேறு பயிற்சிகள் மூலம் இக்குழந்தைகள் சிறந்து விளங்குகின்றனர். இந்த குழந்தைகளின் திறமை மிக்க செயல்களை பார்த்து எங்கள் பள்ளி மாணவர்களும் பல்வேறு நற்செயல்களை இவர்கள் மூலம் கற்றுக்கொள்வது பயனளிக்கும் விதமாகவும் இருக்கும் என்றார்.

அமிர்த் சிறப்பு மையத்தின் முதல்வர் நளினி ஜெயபிரகாஷ் கூறுகையில்:-
அமிர்த் சிறப்பு மையம் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் விதமாக இம்மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் துவங்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இம்மையத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது உடையவர்கள் வரை உள்ளனர். 50 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இம்மையம் தற்போது 140 மாணவர்கள் கொண்டு செயல்படுகிறது. இம்மையத்திற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனவர்கள் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் வயதுக்கும் கற்றல் திறனுக்கும் ஏற்ப பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு சுயசார்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, ஆரம்ப கல்வி, பிசியோதெரபி, பேச்சு திறன் போன்றவற்றை வழங்கபடுகிறது.


பேப்டிஸ்ட் அகாடமி பள்ளியின் முதல்வர் டேனியல் கூறுகையில்:-
குழந்தைகள் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த வருடம் குழந்தைகள் தின விழாவினை அமிர்த் சிறப்பு மையத்தில் இவர்களுடன் கொண்டாடுகின்றனர். இவர்களை புரிந்து கொண்டு இவர்களுக்கு உதவி செய்வது மூலம் மாணவர்கள் பல்வேறு நல்ல செயல்களை கற்றுக்கொள்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு கற்பிக்கப்டும் பல்வேறு பயிற்சிகள் மூலம் இக்குழந்தைகள் சிறந்து விளங்குகின்றனர். இந்த குழந்தைகளின் திறமை மிக்க செயல்களை பார்த்து எங்கள் பள்ளி மாணவர்களும் பல்வேறு நற்செயல்களை இவர்கள் மூலம் கற்றுக்கொள்வது பயனளிக்கும் விதமாகவும் இருக்கும் என்றார்.

அமிர்த் சிறப்பு மையத்தின் முதல்வர் நளினி ஜெயபிரகாஷ் கூறுகையில்:-
அமிர்த் சிறப்பு மையம் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் விதமாக இம்மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் துவங்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இம்மையத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது உடையவர்கள் வரை உள்ளனர். 50 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இம்மையம் தற்போது 140 மாணவர்கள் கொண்டு செயல்படுகிறது. இம்மையத்திற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனவர்கள் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் வயதுக்கும் கற்றல் திறனுக்கும் ஏற்ப பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு சுயசார்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, ஆரம்ப கல்வி, பிசியோதெரபி, பேச்சு திறன் போன்றவற்றை வழங்கபடுகிறது.
