அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறையை தளர்த்த வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30 ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டுமெனவும், அப்படி செய்தால் மட்டுமே வணிகர்களும், சிறு தொழில் முனைவோர்களும் தங்களது வாழ்வதாரத்தை காப்பற்றி கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
மேலும், ரயில் நிலையம், விமான நிலையம், தனியார் மருத்துவமனை, மருந்து கடை உள்ளிட்டவற்றில் அரசு உத்தரவுப்படி 500, 1000 ரூபாய் தாள்களை பெற்று கொள்ள வேண்டுமெனவும், அதனை பின்பற்றாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வெறும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வைத்து சாதரண மக்கள் வாழ முடியாது எனவும், 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு பதிலாக 500 தாள்களை அச்சிட்டு வெளியிட்டு இருந்தால் சாதரண மக்கள் பயன்பெற்று இருப்பார்கள் எனவும் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று ஆட்சி பணிக்கு திரும்ப பெற வேண்டுமென்பதே தமது விருப்பமென அவர் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30 ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டுமெனவும், அப்படி செய்தால் மட்டுமே வணிகர்களும், சிறு தொழில் முனைவோர்களும் தங்களது வாழ்வதாரத்தை காப்பற்றி கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
மேலும், ரயில் நிலையம், விமான நிலையம், தனியார் மருத்துவமனை, மருந்து கடை உள்ளிட்டவற்றில் அரசு உத்தரவுப்படி 500, 1000 ரூபாய் தாள்களை பெற்று கொள்ள வேண்டுமெனவும், அதனை பின்பற்றாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வெறும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வைத்து சாதரண மக்கள் வாழ முடியாது எனவும், 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு பதிலாக 500 தாள்களை அச்சிட்டு வெளியிட்டு இருந்தால் சாதரண மக்கள் பயன்பெற்று இருப்பார்கள் எனவும் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று ஆட்சி பணிக்கு திரும்ப பெற வேண்டுமென்பதே தமது விருப்பமென அவர் தெரிவித்தார்.