ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இலவச குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு இச்சிகிச்சை பிரிவின் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு நோயினால் ஏற்படும் மனச்சோர்வு நீங்கி அவர்களுக்கு ஒரு புத்துணர்வாக அமைந்தது. மேலும், இதில் மிகச்சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பரிசுகள் வழங்குவதுடன், 2017 காலண்டரிலும் அந்த ஓவியம் இடம்பெறும் .
ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை முதல்வர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இயக்குநர் பி.குகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் மற்றும் அனைத்து மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.