கோவை சிங்காநல்லூரை அடுத்த கள்ளிமடை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சந்தோஷ்(22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை சந்தோஷ் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் இருந்த போது, அங்கு வந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான அபு மற்றும் கார்த்திகேயன் , சந்தோஷை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த சந்தோஷ்-ஐ மீட்ட பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்த சிங்காநல்லூர் போலீசார் 3 வாலிபர்களிட்ம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை சந்தோஷ் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் இருந்த போது, அங்கு வந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான அபு மற்றும் கார்த்திகேயன் , சந்தோஷை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த சந்தோஷ்-ஐ மீட்ட பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்த சிங்காநல்லூர் போலீசார் 3 வாலிபர்களிட்ம் விசாரணை நடத்தி வருகின்றனர்.