டிரம்பிடம் சீன அதிபர் வலியுறுத்தல் வலிமையான நல்லுறவுக்கு ஒத்துழைப்பு அவசியம்

 நாடுகளிடையேயான நல்லுறவுக்கு சீனா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அவசியம் என புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள  டொனால்ட் டிரம்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து புதிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி  செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா பறித்து கொள்வதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இந்த  நிலையில் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது ஜின்பிங் பேசியதாவது: கடந்த 37 வருடமாக சீனா, அமெரிக்கா இடையே உள்ள ராஜ்ய உறவுமூலம் இரு நாட்டு மக்களும்  ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளனர். உலகத்தில் சீன வளர்ந்து வரும் நாடாகவும், அமெரிக்கா வல்லரசாகவும் உள்ளது.

எனவே வலிமையான பொருளாதாரத்தை பெற்றுள்ள இருநாடுகளும் உலக அமைதிக்காக இணைந்து பணியாற்றுவது அவசியம். வலிமையான  இரு நாடுகளின்  ஒத்துழைப்பே வலிமையான நல்லுறவுக்கு வழிகாட்டியாக உள்ளது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சீனா  தொடர்ந்து அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. இவ்வாறு ஜின்பிங் தெரிவித்தார். அப்போது பேசிய டிரம்ப், ‘‘அமெரிக்கா சீனா  இடையேயான உறவு மற்றும் இருநாடுகளுக்கும் கிடைத்த பலன்களை ஒப்புக்கொள்கிறேன். இருநாடுகள் இடையே  வலிமையான உறவு  நீடிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...