கோவை ஆர்.எஸ்.புரத்தை அடுத்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தரணிதரன் (13) என்ற மகன் உள்ளார். இவர், பூமார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், திங்களன்று தரணிதரன் பள்ளியில் விளையாடிய போது அவரது கணித ஆசிரியர் சிவராஜ் பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த தரணிதரன் இது குறித்து பெற்றோரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், அழுதபடி உறங்கினார். இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று (இன்று) காலையும் அதேபோல் சிவராஜ் தரணிதரனை பிரம்பால் அடிக்கவே அவர் தனது பெற்றோரிடம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் தரணிதரனை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து மாணவரின் தந்தை கூறுகையில், என் மகனை கணித ஆசிரியர் சிவராஜ் தாக்கியதாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், எனது மகனை தாக்கி ஆசிரியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிய பெற்றோர், அம்மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
.jpg)