பள்ளி மாணவருக்கு பிரம்படி கொடுத்த ஆசிரியர் - அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை


கோவை ஆர்.எஸ்.புரத்தை அடுத்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தரணிதரன் (13) என்ற மகன் உள்ளார். இவர், பூமார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், திங்களன்று தரணிதரன் பள்ளியில் விளையாடிய போது அவரது கணித ஆசிரியர் சிவராஜ் பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த தரணிதரன் இது குறித்து பெற்றோரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், அழுதபடி உறங்கினார். இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று (இன்று) காலையும் அதேபோல் சிவராஜ் தரணிதரனை பிரம்பால் அடிக்கவே அவர் தனது பெற்றோரிடம் புகார் அளித்தார். 



இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் தரணிதரனை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து மாணவரின் தந்தை கூறுகையில், என் மகனை கணித ஆசிரியர் சிவராஜ் தாக்கியதாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், எனது மகனை தாக்கி ஆசிரியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிய பெற்றோர், அம்மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...