இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை 7.40 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பொருள் சேதம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.