வங்கியில் பணத்தை மாற்றினால் விரலில் மை: நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் அமல்:

டில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று முதல் அமலாகிறது.

சதி:

கறுப்பு பணம் வைத்திருப்போர், ஆட்களை குழுக்களாக அனுப்பி வைத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். கறுப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சில விரோத சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். வங்கியில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் இருப்பு குறித்து, பிரதமர் மோடி , நிதியமைச்சர் ஜெட்லி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பீதி வேண்டாம்:

பணம் தேவையான அளவு உள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. சிறிய மதிப்பு கொண்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வழிபாட்டு தலங்கள் முன்வர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில், பணப்பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னணு வாலட் முறைகளை பிரபலப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு:

அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் தேவை, சப்ளை, குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேவையான அளவு உப்பு கையிருப்பு உள்ளது. திடீர் விலையேற்றத்திற்கு காரணம் இல்லை என்றார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...