50, 100 ரூபாய் நோட்டுக்களை இலவசமாக வழங்கும் தேவாலயம்!

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதினர்.

நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம், தேவையான பணத்தினை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள போதிலும், ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இல்லை.

இதனால் மக்கள் அனைவரும் 100 ரூபாய் நோட்டுகளுக்காக வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.இன்று முதல் சென்னை ஏ.டி.எம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க தொடங்கின.

இந்நிலையில் கேரளாவில் உள்ள தேவாலயம் ஒன்று மக்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிவித்துள்ளது. கொச்சியில் உள்ள இந்த தேவாலயத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றை தேவையானவர்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர் எவ்வளவு பணம் எடுத்தார்களோ அந்த பணத்தை இருக்கும்போது திரும்ப வைத்து விடலாம்.

நீங்கள் எவ்வளவு பணம் எடுக்கிறீர்கள், வைக்கிறீர்கள் என்பது உங்களுக்கும் இறைவனுக்குமே வெளிச்சம். தேவாலயத்தின் இந்த அற்புத சேவை அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில்லறை இல்லாமல் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காவே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாதிரியார் ஜிம்மி கூறியுள்ளார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...