கோவை, புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்சீர் (21). ஆட்டோ ஓட்டுநர். தீபாவளியன்று வீட்டின் அருகே ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி இவரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜென்சீர் வெளியே வந்தார்.
இந்நிலையில், செவ்வாயன்று (இன்று) பொட்டு விக்னேஷ், ஆவி, சரத் ஆகிய மூன்று பேரும் ஜென்சீரின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஜென்சீரை மீட்டு மருதுவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த இராமநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.