ஆட்டோ ஓட்டுநருக்கு கத்தி குத்து


கோவை, புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்சீர் (21). ஆட்டோ ஓட்டுநர். தீபாவளியன்று வீட்டின் அருகே ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி இவரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜென்சீர் வெளியே வந்தார்.

இந்நிலையில், செவ்வாயன்று (இன்று) பொட்டு விக்னேஷ், ஆவி, சரத் ஆகிய மூன்று பேரும் ஜென்சீரின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஜென்சீரை மீட்டு மருதுவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த இராமநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...