மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டில்லி எய்ம்ஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரே டுவிட்
செய்துள்ளார்.
சுஷ்மா சுவராஜ் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறுநீரக கோளாறு காரணமாக நான் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது டயாலிசிஸ் நடந்து கொண்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இறைவன் அருள்புரிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உடல்நிலை குறித்து நண்பர்களுக்கு தெரிவிப்பதற்காகவே இதனை பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுஷ்மா சுவராஜ் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறுநீரக கோளாறு காரணமாக நான் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது டயாலிசிஸ் நடந்து கொண்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இறைவன் அருள்புரிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உடல்நிலை குறித்து நண்பர்களுக்கு தெரிவிப்பதற்காகவே இதனை பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.