பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500, 1000 ரூபாயால் செலுத்தலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாளச் சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''கோவை மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட வார்டுகளில் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மேற்கு, வடக்கு, மத்திய மண்டலம், கிழக்கு, தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களை பாதாள சாக்கடை இணைப்பு பெற மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையினை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும், நவம்பர் 17ம் தேதி முதல் மேற்கு மண்டல பகுதிகளுக்கு 12 வது வார்டில் உள்ள சிந்தாமணி நகர் வரிவசூல் மையத்தில் தொகை செலுத்தலாம். தெற்கு மண்டலத்தில் உள்ள பொன்னையராஜாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலும் பாதாள சாக்கடை இணைப்பு தொகையை செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், பாதாளச் சாக்கடை பணி முடியும் தருவாயில் உள்ள பழைய மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். பணிகள் முடிவடைந்ததும் இணைப்புகள் வழங்கப்படும். செலுத்தும் வைப்புத் தொகையில் மாறுதல் ஏற்படும் பொழுது அதற்கு ஏற்றவாறு பிறகு தொகையை செலுத்த வேண்டும். மேலும், வைப்புத் தொகையை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் மற்றும் சிறப்பு முகாம்களிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இரசீது பெற்றுப் கொள்ளலாம்'' என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...