கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
''கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் உள்ளிட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் மக்களால் முறையின்றி கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. அவை மக்கும் தன்மை இல்லாததால் சுற்றுப்புறச் சூழலுக்கு அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று உதவி மாநகர நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்களுடன் சுந்தராபுரம் பகுதியிலுள்ள மொத்தமாக பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பை என 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதி பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் திடீர் சோதனை நடத்தப்படும். மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
''கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் உள்ளிட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் மக்களால் முறையின்றி கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. அவை மக்கும் தன்மை இல்லாததால் சுற்றுப்புறச் சூழலுக்கு அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று உதவி மாநகர நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்களுடன் சுந்தராபுரம் பகுதியிலுள்ள மொத்தமாக பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பை என 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதி பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் திடீர் சோதனை நடத்தப்படும். மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்துள்ளார்.