கணைய அழற்சி சிகிச்சையில் ஜெம் மருத்துவமனை சாதனை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (22). பி.இ. கணினி அறிவியல் பட்டதாரியான இவருக்கு கணையத்தில் அழற்சி ஏற்பட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு கோவையில் செயல்படும் ஜெம் மருத்துவமனையில் கணைய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலைமை மருத்துவர் பழனிவேலு தலைமையில் மருத்துவர்கள் கான், ரமேஷ், திவாகர் ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பின் அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி தற்போது அவர் நல்ல முறையில் உடல் நலம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சி.பழனிவேலு கூறுகையில், ''பித்தப்பை கற்களின் தூண்டுதலால் தான் கணையம் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மது அருந்துதல், வைரஸ் கிருமிகள் காரணமாக கணையம் பாதிக்கப்பட்டு வருகிறது. உரிய தருணத்தில் சரியான சிகிச்சை அளித்தால் கணைய அழற்சியில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடலாம்'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...