வங்கிகளில் பணம் மாற்ற வருபவருக்கு மை வைக்கும் முறை டெல்லியில் அறிமுகம்

மத்திய அரசு அறிவித்த படி வங்கியில் பணம் மாற்ற வருபவருக்கு மை வைக்கும் நடைமுறை டெல்லி உட்பட வடமாநிலங்களில் உள்ள வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது’ என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.இதற்கிடையே பழைய நோட்டுகளை மாற்றுவதையே பல நபர்கள் தொழிலாக கொண்டதுபோல, மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு சென்று மாற்றி வருவதால் மற்றவர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் மீண்டும் ஒரு சில நபர்கள் பணம் எடுப்பதை தவிர்க்க, தேர்தலின்போது ஓட்டு பதிவு செய்ததற்கு அடையாளமாக கை விரலில் அழியாத மை வைப்பதுபோல, வங்கிக்கு வந்து பணத்தை மாற்றிக்கொள்கிற நபர்களுக்கு அழியாத மை வைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த முறை இன்று டெல்லியில் உள்ள வங்கியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல்,  பஞ்சாப்பில் உள்ள வங்கிகளில் பணம் மாற்றியவர்களுக்கு மை வைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வலது ஆள்காட்டி விரலிலும் பிற மாநிலங்களில் இடது ஆள்காட்டி விரலிலும் மை வைக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த முறை அமலாக ஓரிருநாள் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆட்களை அமர்த்தி வங்கிக்கு வந்து மீண்டும் மீண்டும் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...