இந்திய மருத்துவர் சங்கத்தை கலைத்து தேசிய மருத்துவர் சங்கத்தை உருவாக்க
முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் இந்திய மருத்துவர்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய மருத்துவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பாக அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து, தேசிய மருத்துவச் சங்கத்தை உருவாக்க மத்திய அரசு முயல்வதாகவும், அவ்வமைப்பில் 20 உறுப்பினர்களில் 15 பேரை நியமன முறையில் மருத்துவர் அல்லாதவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய மருத்துவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பாக அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து, தேசிய மருத்துவச் சங்கத்தை உருவாக்க மத்திய அரசு முயல்வதாகவும், அவ்வமைப்பில் 20 உறுப்பினர்களில் 15 பேரை நியமன முறையில் மருத்துவர் அல்லாதவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.