கோவையில் செயல்பட்டு வரும் கேஎம்சிஎச் மருத்துவமனையில் குமாரசாமி (50)
என்பவர் கடும் முதுகு வலியின் காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று
அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த இருதய மருத்துவர் ஆர்.சுரேஷ் குமார், குமாரசாமியின் இருதயத்திலிருந்து வெளிவரும் இரத்தக் குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசோதனையில், அந்த விரிசல் மூளை, கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் குடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் வரை பரவி இருப்பதும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது உறுதி என கேஎம்சிஎச் இருதய- நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜயநாத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து குமாரசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நலம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 10 அறுவை சிகிச்சைகள் நூறு சதவிகிதம் வெற்றியுடன் செய்யப்பட்டுள்ளன என்று கேம்எம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.
அவரை பரிசோதித்த இருதய மருத்துவர் ஆர்.சுரேஷ் குமார், குமாரசாமியின் இருதயத்திலிருந்து வெளிவரும் இரத்தக் குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசோதனையில், அந்த விரிசல் மூளை, கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் குடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் வரை பரவி இருப்பதும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது உறுதி என கேஎம்சிஎச் இருதய- நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜயநாத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து குமாரசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நலம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 10 அறுவை சிகிச்சைகள் நூறு சதவிகிதம் வெற்றியுடன் செய்யப்பட்டுள்ளன என்று கேம்எம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.