முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டார்

கோவையில் செயல்பட்டு வரும் கேஎம்சிஎச் மருத்துவமனையில் குமாரசாமி (50) என்பவர் கடும் முதுகு வலியின் காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த இருதய மருத்துவர் ஆர்.சுரேஷ் குமார், குமாரசாமியின் இருதயத்திலிருந்து வெளிவரும் இரத்தக் குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசோதனையில், அந்த விரிசல் மூளை, கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் குடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் வரை பரவி இருப்பதும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது உறுதி என கேஎம்சிஎச் இருதய- நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜயநாத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து குமாரசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நலம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 10 அறுவை சிகிச்சைகள் நூறு சதவிகிதம் வெற்றியுடன் செய்யப்பட்டுள்ளன என்று கேம்எம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...