தண்ணீரை தேடி வந்த புள்ளி மான் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக தண்ணீரினைத் தேடி வன விலங்குகள் வனப்பகுதியினை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் நுழைந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் பெத்திகுட்டையை அடுத்த ஓதிமலை காரனூரில் செவ்வாயன்று இரவு இரண்டு புள்ளி மான்கள் தண்ணீரை தேடி முத்துசாமி என்பவரது தோட்டத்தினுள் புகுந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.



பின்னர், காலையில் விவசாய பணிக்காக சென்ற விவசாயி கிணற்றின் உள்ளே மான்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மான்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதில் ஒரு புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரோடு இருந்த மற்றொரு மானை மீட்ட வனத்துறையினர் ஓதிமலை காட்டு பகுதியில் பத்திரமாக விட்டனர்.

வனவிலங்குகள் தண்ணீரினை தேடி கிராம பகுதிகளில் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...