கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நில அளவை துறை செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியேறி அப்பகுதியிலேயே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், சாக்கடை நீரை கடந்து செல்ல மரப்பலகையை தாண்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இங்குள்ள கருவூல அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கருவூல அலுவலக ஊழியர்களும் செய்வதறியாது துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பிரச்சனை, சாக்கடை நீர் வெளியேற்றம், வாகன நிறுத்தம் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பில் உள்ளனர்.