குறிச்சி அரவான் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதைகள் மாற்றம்

கோவை மாவட்டம், போத்தனூர் குறிச்சி பிரிவு அருகில் உள்ள அரவான் கோவிலில் வருகிற 18ம் தேதியன்று (வெள்ளி) திருவிழா நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

1) கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி மார்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் ஆத்துபாலம் வழியாக போத்தனூர் குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி வழியாக இரயில்வே கல்யாண மண்டபம், சாரதா மில் ரோடு, தக்காளி மார்கெட் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2) பொள்ளாச்சியிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் ஈச்சனாரி மஹாலட்சுமி கோவில் சந்திப்பிலிருந்து இடதுபுறம் மதுக்கரை மார்க்கெட் ரோடு சென்று பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுகுணாபுரம் பாலக்காடு சாலை வழியாக ஆத்துபாலம் வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3) பொள்ளாச்சி ரோட்டிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய இலகு மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பொள்ளாச்சி ரோடு எல்ஐசி காலனி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வந்து மாச்சாம்பாளையம் ரோட்டில் இடதுபுறம் திரும்பி ஞானபுரம் பாலக்காடு ரோடு சந்திப்பு வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...