கோவை மாவட்டத்தில் உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் மற்றும பேசும் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல் தொழில் மேற்கொள்ள அரசின் மூலம் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த தையல் இயந்திரத்தைப் பெற விண்ணப்பிப்போர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெரும் தையல் பயிற்சி படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இத்தகைய தகுதிகள் உடைய மாற்றுத் திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகலுடன் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த தையல் இயந்திரத்தைப் பெற விண்ணப்பிப்போர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெரும் தையல் பயிற்சி படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இத்தகைய தகுதிகள் உடைய மாற்றுத் திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகலுடன் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.