ரயில் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு

ரயிலில் பயணச் சீட்டு பரிசோதகரை பல நேரங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பயணிகள் தரப்பில் இருந்து தெற்கு ரயில்வேக்கு புகார் வந்தது. இதனையடுத்து பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயிலில் உயர் வகுப்புகள் அதாவது ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் பயணச் சீட்டு பரிசோதகர்களை ரயில் புறப்படும் 1 மணி நேரத்துக்கு முன்பாகவே நடைமேடையிலேயே தொடர்பு கொள்ளலாம்.

படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவே பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ளலாம்.


இதைத் தொடர்ந்து, உயர் வகுப்பு ரயில் பெட்டி பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 15 நிமிடம் முன்பாகவும் பயணச் சீட்டு பரிசோதகரை ரயிலிலேயே இனி எளிதில் அனுகலாம்.

அப்படியும் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் உதவி எண்ணை அழைக்கலாம்:


தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு : 044-25350308
ஹெல்ப் லைன் : 138
சென்னை கோட்டம் : 044-25354457, 9003061977
திருவனந்தபுரம் : 0471-2326484, 9567869375
சேலம் : 0427-2431010, 9600956230
பாலக்காடு : 0491-2552755, 9746763956
மதுரை : 0452-2308250, 9003862961
திருச்சி : 0431-2418992, 9003864966
தலைமை அலுவலகம், வர்த்தகப் பிரிவு
சிறப்பு அதிகாரி : 044-25354405

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...