அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட போவதில்லை: இந்திய அமெரிக்கர் நிக்கி ஹாலே அறிவிப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்டு டிரம்பிற்கு ஆதரவளிப்பேன் என்றும் தெற்கு கரோலினா மாகாணத்தின் குடியரசு கட்சி ஆளுநர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

இந்திய அமெரிக்கரான ஹாலே கூறும்பொழுது, மக்களின் நம்பிக்கை மீது மிக பெரிய மதிப்பு வைத்துள்ளேன்.  அதனை நான் எப்பொழுதும் கூறி வந்துள்ளேன்.  ஜனாதிபதிக்கான குடியரசு கட்சி வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் நவம்பர் 8-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், மாகாணங்களில் நடந்து வருகின்றன.

இண்டியானா மாகாணத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து இந்த தேர்தலில் தோல்வி அடைந்த டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகினார்.  இதனால் டிரம்ப் உத்தேச வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.  இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ஜான் காசிக் விலகியதை அடுத்து டிரம்ப் அதிகாரபூர்வ வேட்பாளராகியுள்ளார்.  வருகிற ஜூலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்படுவார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...