கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டரங்கில் கடை உரிமையாளர்கள் பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆனா பைகள் உபயோகிப்பதாக உறுதியளித்தனர். உறுதியளித்த முதல் 100 கடைகளின் பெயர்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டு, கடை உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர், பேசிய அவர்:-
கோவையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலத்தீன் பைகள் பெருகி வருவதால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோவையிலுள்ள கடை உரிமையாளர்கள் தானாகவே முன்வந்து பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆன பைகள் உபையோகிப்பதாக உறுதியளித்தனர். இதுபோன்ற கடைகளுக்கு உரிய அங்கீகாரமும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும், பாலத்தீன் பைகள் உயிர்களுக்கும், பூமிக்கும் பெரும் கேடுகளை உருவாக்குகிறது. குறிப்பாக பாலித்தீன் பைகள் மக்குவதில்லை. இதனால் மழைநீர் மண்ணுக்கு செல்லாமல், நிலத்தடி நீரும் பாதிக்கிறது. இதுபோன்ற கேடுகளை தவிர்க்க பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது துணிகளால் ஆனா, பைகளை எடுத்து செல்லவும், இதன்மூலம் கோவை நகரம் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற முடியும் என கூறினார்.
இதில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.