பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற கோவை மாநகராட்சி நடவடிக்கை!


கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டரங்கில் கடை உரிமையாளர்கள் பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆனா பைகள் உபயோகிப்பதாக  உறுதியளித்தனர். உறுதியளித்த முதல் 100 கடைகளின் பெயர்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டு, கடை உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.



பின்னர், பேசிய அவர்:-

கோவையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலத்தீன் பைகள் பெருகி வருவதால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.  இதை தடுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோவையிலுள்ள கடை உரிமையாளர்கள் தானாகவே முன்வந்து பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆன பைகள் உபையோகிப்பதாக உறுதியளித்தனர். இதுபோன்ற கடைகளுக்கு உரிய அங்கீகாரமும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும், பாலத்தீன் பைகள் உயிர்களுக்கும், பூமிக்கும் பெரும் கேடுகளை உருவாக்குகிறது. குறிப்பாக பாலித்தீன் பைகள் மக்குவதில்லை. இதனால் மழைநீர்  மண்ணுக்கு செல்லாமல், நிலத்தடி நீரும் பாதிக்கிறது. இதுபோன்ற கேடுகளை தவிர்க்க பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது துணிகளால் ஆனா, பைகளை எடுத்து செல்லவும், இதன்மூலம் கோவை நகரம் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற முடியும் என கூறினார்.

இதில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...