கோவை முத்தன்னன் குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (94). இன்று (வெள்ளி) காலை இவர் அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பழனிச்சாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, முதியவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும், அவர் ஆர்.எஸ்.புரம் பகுதியின் முன்னாள் கவுன்சிலர் மருதாச்சலம் என்பவரது தாத்தா என்று கூறப்படுகிறது.