கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது (28). வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு நாகராஜ் (30) என்பவர் வந்தார். பொருட்களை வாங்கிய பின் ரூ.500 முகம்மதுவிடம் கொடுத்தார். சில்லரை இல்லை என்று முகம்மது கூறவே, நாகராஜ் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், முகம்மதுவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து முகம்மது போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் , வழக்கு பதிந்த போலீசார் நாகராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும், முகம்மதுவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து முகம்மது போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் , வழக்கு பதிந்த போலீசார் நாகராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.