கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று தமிழக மக்களால் இன்றும் நினைவில் இருப்பவர் வ.உ.சி எனும் வ.உ.சிதம்பரனார்.
இவரது 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் வெள்ளியன்று (இன்று) அவரது உருவச் சிலை மற்றும் செக்கிற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய வ.உ.சி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் பா.சு.ஆத்மா சிவகுமார் தலைமை தாங்கினார். கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பா.சு.செந்தில் குமார் மற்றும் செய்யது இஷாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ஹரிஹரன், சிறைத் துறை நல அலுவலர் சத்யமூர்த்தி, வழக்கறிஞர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டர்.
மேலும், சிறைத் துறையின் சார்பில் வ.உ.சி-யின் சிலை மற்றும் செக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் அதனை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.