வ.உ.சிதம்பரனாரின் 80வது நினைவு நாள் அனுசரிப்பு


கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று தமிழக மக்களால் இன்றும் நினைவில் இருப்பவர் வ.உ.சி எனும் வ.உ.சிதம்பரனார்.

இவரது 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் வெள்ளியன்று (இன்று) அவரது உருவச் சிலை மற்றும் செக்கிற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செய்யப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய வ.உ.சி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் பா.சு.ஆத்மா சிவகுமார் தலைமை தாங்கினார். கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பா.சு.செந்தில் குமார் மற்றும் செய்யது இஷாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ஹரிஹரன், சிறைத் துறை நல அலுவலர் சத்யமூர்த்தி, வழக்கறிஞர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டர்.

மேலும், சிறைத் துறையின் சார்பில் வ.உ.சி-யின் சிலை மற்றும் செக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் அதனை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...