விஜய் மல்லையாவுக்கு கடன் தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கியைப் பாராட்டி சமூக நீதிக்கட்சி நூதன போராட்டம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 63 பெருங்கோடீஸ்வர பண முதலைகளின் சுமார் ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மக்களை வஞ்சித்து வரும் இந்நிலையில், பண முதலைகளின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும் விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயக் கடன், ஏழை மாணவர் கல்விக் கடன் என சாதாரண ஏழை, எளிய மக்கள் பெற்றுள்ள வங்கிக் கடனில் சிறிதும் சலுகையின்றி கடுமையான வசூலில் ஈடுபடும் வங்கிகள், விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு வழங்கியுள்ள கடன் தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே கண்டனப் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சமூக நீதிக் கட்சியின் சார்பாக ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்யை ஏமாற்றிய ஏழை விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடியைப் பாராட்டி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தின் பொது மேலாளரிடம் மலர் கொத்து வழங்கி நூதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு சென்ற சமூக நீதிக் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவர்களை கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...