மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான முதல் சுற்று விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று (இன்று) துவங்கியது.

இதில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர் என நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
14 வயதுக்கு உட்பட்ட 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப், டென்னிஸ் பந்து எறிதலும், 17 வயதுக்கு உட்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இப்போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கபடவுள்ளதாக இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர் என நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
14 வயதுக்கு உட்பட்ட 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப், டென்னிஸ் பந்து எறிதலும், 17 வயதுக்கு உட்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இப்போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கபடவுள்ளதாக இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.