தீ குளிப்பதாக மிரட்டிய கணவர் எதிர்பாரா விதமாக தீயில் கருகி பலி


கோவை மாவட்டம், ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (36). இவரது மனைவி சென்பகவள்ளி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

பிரபுவிற்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இதனால் கணவர், மனைவி இடையே அவ்வப்போது பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று, பிரபு மது அருந்துவதற்காக சென்பகவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததையடுத்து, வீட்டில் இருந்த மண்ணெண்னையை உடலின் மீது ஊற்றிவிட்டு தீ வைத்து பலியாகப் போவதாக பிரபு மிரட்டியுள்ளார். 

இந்நிலையில், அவரது கையில் இருந்த தீப்பெட்டியை அவர் உரசி மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாரா விதமாக தீ பற்றி அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. அவரது சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு கோவை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...