கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் கடித்து அவ்வபோது உயிரிழப்பு சம்பவமும் நேரிட்டு வருகிறது. கிராம புறங்களிலும் அதிகமான நாய்கள் திரிகிறது, இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகளும், உள்ளூர் மக்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தெருநாய்கள் பிடித்துக் கொல்லப்பட்டு வருகிறது. தெருநாய்களின் தொல்லை தாங்க முடியாமல் கொல்லப்பட்டு வருகிறது. மறுபுறம் கொலை செய்யப்படுவதற்கு விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது என நீண்டுக்கொண்டு உள்ளது பிரச்சனை.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. கண்காணிப்புக் குழுக்களிடம் நாய்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் தெருநாய்களினால் மாநிலத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு நேரிட்டு உள்ளது.

கந்தன்கோடு மேம்பரம்பாது பகுதியை சேர்ந்த ஹரிதாசன் என்பவரது 15 வயது மகள் கிரிஸ்மா இன்று காலை கடைக்கு பால் வாங்க சென்று உள்ளார். பால் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது தெருநாய்கள் மொத்தமாக நின்று உள்ளன. மொத்தமாக நின்ற தெருநாய்கள் கிரிஸ்மாவை நோக்கி பாய்ந்து உள்ளது. நாய்கள் மொத்தமாக வருவதை பார்த்து மிரண்ட கிரிஸ்மா பயந்து ஓட தொடங்கிவிட்டார். பயந்து ஓடிய கிரிஸ்மா தடுப்பு சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துவிட்டார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டனர். அவருடைய சடலமானது கண்ணம்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...